வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று 06.06.2016திங்கட்கிழமை இடம்பெற்றது.
வருடாந்தம் சிறப்பாக இடம்பெற்று வரும் பொங்கல் விழாவில் காலையில் இருந்தே பக்த அடியார்கள் கோவிலை நோக்கி சென்றிருந்ததுடன் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந் நிலையில் காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்திருந்ததுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் பொங்கல்பொங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை பண்டமெடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று ஆலயத்தின் விசேட பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.



















No comments:
Post a Comment